July 7, 2024

கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பசான் மற்றும் லதோனி வாசிப்பவர்களுக்கான கருத்தமர்வு -2024

கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பசான் மற்றும் லதோனி வாசிப்பவர்களுக்கான கருத்தமர்வு 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு சார்ல்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சின் இயக்குனர் அம்மணி சத்துரு பிரிண்டோ பசான் மற்றும் லதோனிக்கு பொறுப்பான இயக்குனர் அருட்பணி புஷ்பதேவ பெணாண்டோ அவர்களின் வழி நடத்தலின் கீழ் மட்டக்களப்பு சமூக தொலைத்தொடர்பு இயக்குர் அருட்பணி பிறைனர் செலர்; குருமுதல்வர் அருட்பணி ஜோஜ் ஜீவராஜ், அருட்பணி நிக்லஸ் யூட் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ மத அலுவல்கள் பொறுப்பதிகாரி திருமதி ரேக்கா என்போர் கலந்து சிறப்பித்தனர். மட்டக்களப்பு மறைமாவட்ட பங்குகளிலிருந்து பசான் வாசிப்பவர்கள் வருகை தந்து கலந்து பயன்பெற்றனர்.