கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக, அருள்பணி Jayakody Aratchige Don Anton Jayakody அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 4, இப்புதனன்று நியமித்துள்ளார்.
இதுவரை இம்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வந்துள்ள ஆயர் Vincent Marius Joseph Peiris அவர்கள் பணிஓய்வு பெற விரும்பி அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அருள்பணி Jayakody அவர்களை புதிதாக நியமித்துள்ளார்.