May 18, 2024

மட்டக்களப்பு மறைமாவட்ட தூய ஆவிபெருவிழா 2024

மறைமாவட்ட தூய ஆவிபெருவிழா 2024
மட்டக்களப்பு மறைமாவட்ட அருங்கொடை இயக்குனர் அருட்பணி இ. சுலக் ஷன் அடிகளாரின் ஒழுங்கமைப்பிலும் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் ஆலோசனையின் படியும் மட்டக்களப்பு புனித லூர்த்து அன்னை ஆலயத்தில் 18.05.2024 அன்று மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. இத் தூய ஆவி பெருவிழா வழிபாடுகள் மாலை 6.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இரவு 8.00 மணி வரை இறைஇரக்க ஜெபக் குழுவினராலும் பல அருட்தந்தையர்களாலும் சிறப்பாக வழி நடத்தப்பட்டு இரவு 11.00 மணிக்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜீ. ஜீவராஜ் அடிகளாரின் தலைமையில் தூய ஆவியார் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் பல அருட்தந்தையர்களும், பல இறை மக்களுக்கும் வருகை தந்தனர்.